search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேலூர் டாக்டர் வீட்டில் கொள்ளை"

    மேலூர் டாக்டர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேலும் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் காந்திஜி பூங்கா சாலையை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 67). டாக்டரான இவர் கடந்த 6-ந் தேதி நடைபயிற்சி சென்றிருந்தபோது. அவரது வீட்டினுள் புகுந்த கும்பல் அவரது மனைவி மீரா (62) மற்றும் வேலைக்கார பெண், காவலாளி ஆகியோரை துப்பாக்கி மற்றும் பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றது.

    இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் 26 பேருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் திருமங்கலத்தில் பதுங்கி இருந்த கொள்ளையர்களை கைது செய்தனர்.

    இதில் முக்கிய குற்றவாளியான போலீஸ்காரர் சூர்யா, கணபதி, ஹரிவிக்னேஷ் என இதுவரை 19 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சிலரை தேடிவந்த நிலையில் மாட்டுத்தாவணி பகுதியில் பதுங்கி இருந்த மணிராஜ், சிவகுமார், செல்வகுமார் ஆகியோரை இன்று மேலூர் டி.எஸ்.பி. சுபாஷ், இன்ஸ்பெக்டர் ஜேசு ஆகியோர் கைது செய்தனர். இதுவரை இந்த கொள்ளை வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    மேலூரில் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த கும்பலுடன் தொடர்புடைய கவர்னர் மாளிகை போலீஸ்காரர் வீட்டில் இருந்து நக்லைட் துப்பாக்கி மற்றும் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    மதுரை:

    மதுரை மேலூரைச் சேர்ந்த டாக்டர் பாஸ்கரன் வீட்டில் கடந்த 6-ந் தேதி இரவு முகமூடி கும்பல் துப்பாக்கி முனையில் புகுந்து வீட்டில் இருந்த பாஸ்கரனின் மனைவி மீரா (60), பணிப்பெண் மற்றும் காவலாளி ஆகிய 3 பேரையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி தனி அறையில் அடைத்த கொள்ளை கும்பல் பீரோவில் இருந்த பல லட்சம் பணத்தை கொள்ளையடித்து விட்டு ஸ்கார்பியோ காரில் தப்பியது.

    இது குறித்து மேலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியில் பதுங்கி இருந்த கணபதி என்ற குருட்டு கணபதியை (39) போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது டாக்டர் பாஸ்கரன் வீட்டில் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்ட கணபதி தன்னுடன் 26 பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தான். இது தனிப்படை போலீசாருக்கு பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியது.

    தமிழகம் முழுவதும் டாக்டர்கள் மற்றும் என்ஜினீயர்கள் வீடுகளை குறி வைத்து கொள்ளையடிப்பதையே இந்த கும்பல் வழக்கமாக செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து கொள்ளையில் தொடர்புடைய பெருங்குடி ராதாகிருஷ்ணன், மாரிமுத்து, சுரேஷ் குமார், ராஜகுரு, பழனிவேல், ஆனந்த கிருஷ்ணன், மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

    அவர்களிடம் நாட்டு துப்பாக்கி, 2 பிஸ்டல்கள், தோட்டாக்கள் மற்றும் ரூ.40 லட்சம் ரொக்கம், கார் ஆகியவை பறிமுதல் செய்யப் பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

    கைதான ராதா கிருஷ்ணன், டிஸ்மிஸ் செய்யப்பட்ட போலீஸ்காரர். இவர்கள் அனைவரும் திருமங்கலம் பகுதியில் அடிக்கடி சந்தித்து சதி திட்டம் தீட்டி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் குறித்து கணபதியிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது.

    திருமங்கலத்தைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர் குமார் என்பவரிடம் இருந்து இந்த ஆயுதங்களை பெற்றதாக கணபதி தெரிவித்த நிலையில் குமார் வீட்டை சுற்றி வளைத்து தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் நாட்டு துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், 66 பிஸ்டல் தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

    போலீஸ்காரர் குமார், கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வந்ததையடுத்து போலீசார் சென்னைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் சென்னை வருவதை அறிந்த குமார் அங்கிருந்து தலைமறைவாகி மதுரை சென்ற போது கைது செய்யப்பட்டார்.

    குமாரிடம் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், குமார் திரிபுரா மாநிலத்தில் நக்சலைட் தடுப்பு பிரிவில் சில ஆண்டுகள் பணிபுரிந்தது தெரிய வந்தது.

    நக்சலைட்டுகள் வேட்டையின் போது அவர்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்த குமார் ரகசியமாக அதனை திருமங்கலத்திற்கு கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இந்த ஆயுதங்களை கணபதி மற்றும் ரமேஷ் ஆகியோர் மூலம் கொள்ளையர்களுக்கு சப்ளை செய்துள்ளார்.

    மேலும் போலீஸ்காரர் குமார் கடந்த 3 மாதங்களாக கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால் அவரது நடவடிக்கைகள் குறித்து கவர்னர் மாளிகை பாதுகாப்பு படை வீரர்கள் 5 பேரிடம் மதுரையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே டாக்டர் வீட்டில் நடந்த கொள்ளையில் திருப்பூரைச் சேர்ந்த போலீஸ்காரர் சரவணன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதால் சரவணனை பிடிக்க தனிப்படையினர் திருப்பூர் விரைந்துள்ளனர்.

    மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க பல்வேறு இடங்களுக்கு போலீசார் விரைந்துள்ளனர்.

    டாக்டர் வீட்டில் கொள்ளையடித்து விட்டு தப்பிய கும்பல் கோவா சென்று அங்கு சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர்.

    கொள்ளையடிக்கப்பட்ட தொகை ரூ.70 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் டாக்டர் பாஸ்கரனின் மனைவி மீரா கொடுத்த புகாரில் ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுவரை கொள்ளை கும்பலிடம் இருந்து ரூ.40 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் கொள்ளை போன தொகை குறித்து போலீசார் பாஸ்கரனிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரூ.30 லட்சம் வரை கொள்ளை கும்பல் பல்வேறு இடங்களுக்கு சென்று செலவு செய்துள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இன்று காலை கைதான 7 பேரும் மேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி பழனிவேலு, அவர்கள் 7 பேரையும் வருகிற 2-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து குமார் உள்ளிட்ட 7 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    போலீஸ்காரர் குமார் மற்றும் முக்கிய குற்றவாளி கணபதி, ரமேஷ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரணை நடத்த தனிப்படை போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக மேலூர் கோர்ட்டில் மனு செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
    ×